Published : 28 May 2015 02:02 PM
Last Updated : 28 May 2015 02:02 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஜூன் 5-ல் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஜூன் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ”தொகுதி-I (Group-I) முதன்மைத்தேர்வு நடைபெறும் நாள் 05.06.2015, 06.06.2015 மற்றும் 07.06.2015.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 17/2013 நாள் 29.12.2013 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி-I–2013-க்கான முதன்மைத் தேர்வு (Main Written Examination) 05.06.2015, 06.06.2015 மற்றும் 07.06.2015 ஆகிய நாட்களில் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x