Published : 26 May 2015 07:19 AM
Last Updated : 26 May 2015 07:19 AM

பேராசிரியரை தாக்கிய அதிமுகவினர் 4 பேர் கைது

திருத்தணி ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் தமிழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரி யராக உள்ளார். கடந்த 23-ம் தேதி திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தமிழ் சென்றார்அந்த ஏடிஎம் மையம் அருகே திருத்தணி 13-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம், தனது காரை நிறுத்திக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண் டிருந்தார். அப்போது தமிழுக் கும், ஆறுமுகம் தரப்பின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதில், தமிழ் தாக்கப் பட்டார். காயமடைந்த அவர், திருத்தணி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகத்தின் நண்பர்களான மதன், நாகராஜ், நரசிம்மன், வினோத்குமார் ஆகிய 4 பேரை திருத்தணி போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய் தனர் தலைமறைவான கவுன் சிலர் ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x