Published : 29 May 2015 08:53 AM
Last Updated : 29 May 2015 08:53 AM
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா, கடந்த 26-ம் தேதி இரவு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
உங்கள் தாயார் இறந்த தகவல் கேட்டு மிகுந்த கவலையுற்றேன். உங்களின் துக்கத்தில் பங்கேற்பது டன் என் ஆழ்ந்த இரங்கலை உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மனதைரி யத்தைத் தரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இறைவன் திருவடியில் அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுகிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT