Published : 03 Apr 2015 09:59 PM
Last Updated : 03 Apr 2015 09:59 PM
இலங்கை அதிபரின் பேச்சால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன் பிடிக்க அனுமதி வேண்டுமென்கிற கோரிக்கையை பேச்சுவார்த்தையின்போது பரிசீலிப்பதாக கூறினர். இப்போது இலங்கை எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம், படகுகளைப் பறிமுதல் செய்வோம் என்று இலங்கை அதிபர் எச்சரித்துள்ளார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT