Published : 06 Apr 2015 10:23 AM
Last Updated : 06 Apr 2015 10:23 AM

தமாகா பிரமுகர் மறைவு: ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமாகா பிரமுகருமான சைதை பி.ரவியின் மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமாகாவின் தென் சென்னை மாவட்ட முக்கியப் பிரமுகரும், சென்னை மாநகராட்சி யின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான சைதை பி.ரவி 5-ம் தேதி (நேற்று) காலமானார். இந்த செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. 3 முறை மாநகராட்சி உறுப்பினராக மிகச் சிறப்பாக பணியாற்றிய சைதை பி.ரவி, 5 ஆண்டுகள் சென்னை மாநகராட்சியின் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும், இயக்க நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது மறைவைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமாகாவின் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x