Published : 11 Apr 2015 05:24 PM
Last Updated : 11 Apr 2015 05:24 PM
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய, மாநில ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களையவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அனைத்து பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்களை நியமிப்பதுடன், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT