Published : 07 Apr 2015 09:48 AM
Last Updated : 07 Apr 2015 09:48 AM

இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் மேலும் 5 பேர் கைது

இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக கடலோர காவல் படை யினர் நேற்று முன்தினம் இரவு கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகம் - ஆந்திரம் இடையே கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் இலங்கை படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தப் படகை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தது தெரியவந்ததால் படகில் இருந்த 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் பிடித்து வந்து, சென்னை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படகும் அதிலிருந்த ஒன்றரை டன் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 5 பேரும் இலங்கை திரிகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இதேபோல நேற்று முன்தினம் இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து சுமார் 30 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x