Published : 03 Apr 2015 10:24 AM
Last Updated : 03 Apr 2015 10:24 AM

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்

திருவண்ணாமைலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (3-ம் தேதி) மாலை 4.23 மணிக்கு தொடங்கி நாளை (4-ம் தேதி) மாலை 6.10 மணிக்கு பங்குனி மாத பவுர்ணமி நிறைவு பெறுகிறது. வெள்ளிக்கிழமை (இன்று) இரவு முதல் கிரிவலம் வர உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x