Published : 04 Apr 2015 09:45 AM
Last Updated : 04 Apr 2015 09:45 AM
சென்டாக் மாணவர்களுக்கான ரூ.2.20 கோடிக்கான காசோலை களை கல்லூரி நிர்வாகத் தரப் பினரிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சென்டாக் மூலம் தேர்வு பெற்று தனியார் மருத்துவம் மற்றும் பொறி யியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி தரப்படுகிறது.
இத்திட்டப்படி சென்டாக் மூலம் தேர்வு பெற்ற அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் வருமான வரம்பின்றி ஓராண்டுக்கு ரூ.2.25 லட்சம் தரப்படுகிறது. அதுபோல பொறியியல் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.25 ஆயிரம் தரப்படுகிறது. 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் சுமார் ரூ.33.91 கோடி காமராஜர் நிதியுதவி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT