Published : 10 Apr 2015 10:31 AM
Last Updated : 10 Apr 2015 10:31 AM

ரூ.1,200 கோடிக்கு பிணைய பத்திரம் ஏலம்

ரூ.1,200 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பங்கு வடிவிலான ரூ.1,200 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக் கேட்புகளை காலை 10.30 முதல் பகல்12 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகளை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் 13-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x