Published : 19 Apr 2015 01:10 PM
Last Updated : 19 Apr 2015 01:10 PM
திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைப் பாதையில், கடந்த புதன்கிழமை இரவு, அடையாளம் தெரியாத பெண் (30) ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். இது குறித்து, திருக்கழுக்குன்றம் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவத்தன்று அந்த பெண்ணை மலைப் பாதையில் மீட்டபோது, அங்கு மர்மமான முறையில் இருசக்கர வாகனம் ஒன்று நின்றிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வாக னத்தை சோதனையிட்டபோது, அதில் வாகன பதிவு அடையாள அட்டை இருந் தது. அதில் இருந்த முகவரியை கண்டு பிடித்து சென்றபோது சிறுவன் ஒருவன் சிக்கினான். விசாரணையில் மலைப் பாதை யில் வடமாநில பெண்ணை பலாத்காரம் செய்ததும் பிறகு அவரை கொலை செய்ய முயன்றதையும் ஒப்புக் கொண்டான்.
கடந்த ஆண்டு முள்ளிகொளத்தூர் பகுதி யில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றதையும் ஒப்புக்கொண்டான். இதேபோல், திருக்கழுக்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், இரவு நேரங்களில் சாலையில் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை அவன் வழக்கமாக வைத்திருந்தது விசார ணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT