Published : 07 Apr 2015 10:31 AM
Last Updated : 07 Apr 2015 10:31 AM

வழக்கறிஞர் கொலை வழக்கு: 7 பேர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை மேலமருத் துவக் குடியைச் சேர்ந்தவர் ம.க.ராஜா(34). சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது அண்ணன் ம.க.ஸ்டாலின். இவர், பாமக மாநில துணைத் தலைவராகப் பொறுப்புவகித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி நள்ளிரவு திருவிடைமருதூர் அருகே ம.க.ராஜாவை ஒரு கும்பல் கொலை செய்தது.

இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, திருவிடைமருதூர் அருகே யுள்ள கீழத்தூண்டில் விநாயகம் பேட்டை கோபி(24), உடையாளூர் அண்ணா நகர் ராம் (எ) ராமராஜன்(27), திருமங்கலக்குடி பாபு (எ) ரத்தினவேல்பாண்டியன், ராமசாமி, அந்துமணி (எ) குமரவேல், நரசிங்கன்பேட்டை மூவேந்திரன்(26), திருவிடைமருதூர் பிரகாஷ்(28) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களில் 4 பேர் திருச்சி மத்திய சிறையிலும், 3 பேர் கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x