Published : 24 Apr 2015 10:04 AM
Last Updated : 24 Apr 2015 10:04 AM

காரை மறித்து மில் அதிபரிடம் ரூ.12 லட்சம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (45). இவர் கடலை மில் வைத்துள்ளார். இவர், திருநெல்வேலி மாவட்டத்துக்கு மில்லில் இருந்து கடலை ஏற்றுமதி செய்துவந்தார். மாதம் ஒருமுறை கடலை அனுப்பிய கடைகளில் வசூலுக்கு செல்வார். தனது மேலாளர் விஜயகுமார், நண்பர்களுடன் நேற்று முன்தினம் திருச்செந்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து திருநெல்வேலியில் கடலை அனுப்பிய கடைகளில் வசூலுக்கு சென்றுள்ளார். வசூலான தொகை ரூ.12 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேற்று மதியம் திருநெல்வேலியில் இருந்து காரில் புறப்பட்டுள்ளனர். காரில் 4 பேர் இருந்துள்ளனர். மதுரை -திண்டுக்கல் சாலையில் பள்ளப்பட்டி பிரிவு அருகே வந்த போது நெடுஞ்சாலை ஹோட்டலில் டீ சாப்பிட நிறுத்தி யுள்ளனர். காரிலிருந்து இறங்கிய பழனிச்சாமி, விஜயகுமார் மற்ற 2 பேரும் டீக்கடைக்கு சென்றனர்.

அப்போது இவர்கள் காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் கும்பல் திடீரென்று பணப்பையை கையில் வைத்திருந்த விஜய குமாரை தலையில் பலமாக தாக்கியுள்ளனர். நிலைகுலைந்த அவரிடம் இருந்து பணப்பையை பறித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

சினிமா போல் நடந்த இச்சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர். டி.ஐ.ஜி. அறிவுச் செல்வம், திண்டுக்கல் எஸ்.பி. சரவணன் மற்றும் போலீ ஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் வழக்கமாக வசூலுக்கு வந்து செல்வதை கண்காணித்து வந்த கொள்ளையர்கள் திருநெல்வேலியில் இருந்து விஜயகுமார் காரை பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x