Published : 02 Apr 2015 09:33 AM
Last Updated : 02 Apr 2015 09:33 AM
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அக்ரகார தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சுந்தரி (52). நேற்று முன்தினம் காலையில் இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது காவி உடை அணிந்து வந்த 3 பேர், தங்களை ஜோதிடர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சுந்தரியிடம் பேசியுள்ளனர்.
“உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. அதை நீக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். நாங்கள் இதை தெய்வப் பணியாகவே செய்கி றோம்” என்றும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சுந்தரி 3 பேரை யும் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். அவர்களில் ஒருவர் ஒரு டப்பா வில் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் நிறப் பொடியை கலந்துள் ளார். பிறகு, ‘பூஜை பலிக்க வேண்டுமானால் இந்த தண்ணீரில் ஏதாவது ஒரு தங்க நகையை போட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட சுந்தரி, தான் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை கழற்றி போட்டுள்ளார்.
பூஜையை முடித்த பிறகு செயின் போடப்பட்ட டப்பாவை சுந்தரியிடம் கொடுத்து, ‘மாலை 4 மணிக்கு பின்னர் இதிலுள்ள சங்கிலியை எடுத்து அணிந்து கொள்ளுங்கள். உங்கள் தோஷமெல்லாம் நீங்கி விடும்’ என்று கூறிச் சென்றுள்ளனர்.
மாலையில் டப்பாவை திறந்து பார்த்த சுந்தரி, அதற்குள் தங்கச் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் அவர் களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை யில் சிந்தாதிரிப்பேட்டை பகுதி யில் சந்தேகமளிக்கும் வகையில் சுற்றிக் கொண்டிருந்த 3 பேரை போலீஸார் பிடித்தனர். விசாரணை யில் அவர்கள் தான் ஜோதிடர்கள் போல வந்து சுந்தரியை ஏமாற்றி யவர்கள் என்பது தெரிய வந்தது.
விசாரணையில், பிடிபட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த மைக்கேல், செந்தில், அந்தோணி என்பது தெரிந் தது. அதே பகுதியை சேர்ந்த லதா என்ற மற்றொரு பெண்ணிடமும் தோஷம் கழிப்பதாக கூறி அவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் பறித்ததும் தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT