Published : 02 Apr 2015 10:08 AM
Last Updated : 02 Apr 2015 10:08 AM

சேலத்தில் 5-ல் தேமுதிக மகளிரணி மாநாடு

சேலத்தில் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள தேமுதிக மகளிரணி மாநாட்டில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொருவரின் வாழ்விலும் பெண்கள் முக்கிய அங்கமாக திகழ்கிறார்கள்.

சிறப்பு வாய்ந்த பெண்களின் நலனை காக்கும் வகையில் மதுவை ஒழிப்போம், பாலியல் வன்கொடுமை தடுப்போம், பெண்ணுரிமை காப்போம் என்ற முழக்கத்துடன் சேலம் போஸ் மைதானத்தில் ஏப்ரல் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு தேமுதிக மகளிர் அணி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அன்னையர்களும், சகோதரிகளும், பொது மக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x