Published : 13 Apr 2015 09:25 AM
Last Updated : 13 Apr 2015 09:25 AM

டாஸ்மாக் கடை நேரத்தை குறைக்க கனிமொழி வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி, பிரச்சாரக் குழு நிர் வாகிகள் கூட்டம் அண்ணா அறிவால யத்தில் நேற்று நடைபெற்றது. பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தி யாளர்களிடம் கனிமொழி கூறிய தாவது:

கடைகள், பள்ளிகள், வழிபாட் டுத் தலங்கள் இருக்கும் பகுதி களில் செயல்படும் டாஸ்மாக் கடை களை உடனடியாக மூட வேண்டும். கூடுதல் மதுக்கடைகளை தமிழக அரசு திறப்பது கண்டிக்கத்தக்கது. குறைந்தபட்சம் மதுக்கடைகளை திறந்து வைக்கும் நேரத்தையாவது தமிழக அரசு குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x