Published : 13 Apr 2015 09:18 AM
Last Updated : 13 Apr 2015 09:18 AM
தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை என்பதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (செவ்வாய்க்கிழமை) செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகளுக்காக பூங்காவுக்கு விடுமுறை விடப்படும்.
எனினும் வரும் செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை என்பதால் அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT