Published : 08 Apr 2015 10:30 AM
Last Updated : 08 Apr 2015 10:30 AM

சாலை ஆய்வாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொறியியல் பிரிவில் காலியாக உள்ள ஒரு சாலை ஆய்வாளர் (நிலை- 2) பணியிடத்துக்கு ஆள் தேர்வு செய்யப்படவுள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், ஜாதி மற்றும் பிற சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன், நிறைவு செய்த விண்ணப்பத்தை வருகிற 17-ம் தேதிக்குள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x