Published : 03 Apr 2015 09:50 AM
Last Updated : 03 Apr 2015 09:50 AM

250 மி.லி பால் விற்பனை: சென்னையில் விரிவுபடுத்த ஆவின் நிறுவனம் முடிவு

250 மி.லி அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட் விற்ப னையை சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஆவின் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் வடசென்னையில் உள்ள சில பகுதிகளில் கால் லிட்டர் பால் பாக்கெட் விற்ப னையை தொடங்கியது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 2,500 முதல் 3 ஆயிரம் கால் லிட்டர் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்த 250 மி.லி பால் பாக்கெட் விற்பனையை விரிவுபடுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 3 இடங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகள் மூலம் இதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு வடசென்னையில் தொடங்கப்பட்ட கால் லிட்டர் ஆவின் பால் விற் பனை பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை சென்னை மாநகர் முழுவதும்அமல்படுத்த திட்டமிடப்பட்டுள் ளது.

இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப் படும். ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளன. ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு கால் லிட்டர் பால் பாக்கெட் அட்டை கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x