Published : 07 Apr 2015 11:05 AM
Last Updated : 07 Apr 2015 11:05 AM
எழுதுபொருள் அச்சகத்துறை யின் கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள அரசு தலைமை அச்சகம் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம் மற்றும் விருத்தாச்சலத்தில் கிளை அச்சகங் கள் உள்ளன. இந்த அச்சகங்களில் பல்வேறு நிலைகளில், 79 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கான கல்வி மற்றும் வயது உள்ளிட்ட தகுதிகள் குறி்த்த விவரங்கள், விண்ணப்ப படிவம் இணைப்புகள் குறித்த விவரங்கள் தமிழக அரசு இணையதளத்தில் ‘tn.gov.in’ வெளியிடப்பட்டு உள்ளது.
இப்பணியிடங்களுக்கு இம்மாதம், 17-ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், ‘இயக்குநர், எழுது பொருள் மற்றும் அச்சக இயக்ககம், 110- அண்ணாசாலை, சென்னை-2’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT