Published : 07 Apr 2015 10:39 AM
Last Updated : 07 Apr 2015 10:39 AM

திருமணம் செய்துகொள்வதாக கூறி சொத்துகளை அபகரித்து விட்டதாக திருமாவளவன் மீது பெண் புகார்

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி எனது சொத்துகளை அபகரித்து விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த கவிதா (34), சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், திருமணம் செய்வதாகக் கூறி தனது சொத்துகளை அபகரித்துக்கொண்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், நிருபர்களிடம் கவிதா கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனார். அவருடன் பழகியதால் எனது முதல் கணவரை விட்டு பிரிந்தேன். என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி எனக்கு சொந்தமான பல கோடி சொத்துகளை திருமாவளவன் அபகரித்துக்கொண்டார். திருமணம் செய்தால் அரசியல் வாழ்க்கை கெட்டுவிடும் என்று கூறி இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்.

நடவடிக்கை இல்லை

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின்தொடர்ந்து வரு கின்றனர். என்னிடம் மீதமுள்ள சொத்துகளையும் எழுதிக்கேட்டு மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் உட்பட பலரிடம் புகார் கொடுத்தேன். ஏற்கெனவே டிஜிபியிடமும் 2 முறை புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இப்போது மீண்டும் புகார் கொடுத்துள்ளேன்.

இவ்வறு கவிதா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x