Published : 30 Mar 2015 12:06 PM
Last Updated : 30 Mar 2015 12:06 PM

திருவாரூர் விபத்து: தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் விருந்தினர் மாளிகையின் முகப்பு நேற்று இடிந்து விழுந்ததில், அங்கு பணியிலிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 16 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பொறியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவாரூர் விபத்தில் பலியான 5 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x