Published : 02 Mar 2015 08:14 PM
Last Updated : 02 Mar 2015 08:14 PM

மீஞ்சூரில் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பேராசிரியரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியருக்கு எதிராக மீஞ்சூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மீஞ்சூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்லூரியில் கணினி துறை தலைவராக உள்ள பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன் தினம் கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இச்சூழலில், நேற்று காலை கல்லூரிக்கு வந்த கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x