Published : 20 Mar 2015 09:21 AM
Last Updated : 20 Mar 2015 09:21 AM
கூவம் ஆறு பாதுகாவலரை நியமிப்பது தொடர்பாக எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந் திய அமர்வு உத்தரவிட் டுள்ளது.
சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளால் மாசுபட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த ஆறுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தின் தென்னிந்திய அமர்வில் சென்னையைச் சேர்ந்த பி.எட்வின் வில்சன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
பக்கிங்ஹாம் கால்வாயில் சிபிசிஎல், எண்ணூர் பவர் பிளான்ட், மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கழிவுநீரை திறந்து விடுவதாக விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மனுவை விசாரித்த அமர்வு, ‘தமிழக ஆறுகள் பாதுகாப்புச் சட்டம் 1884-ன்படி, கூவம் ஆறு பாதுகாவ லரை நியமிக்க வேண் டும். பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை விடும் நிறுவனங்களை இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.
கழிவுநீர் வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும்’ என்று உத்தர விட்டிருந்தது.
இந்த மனு, அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந் தது. அப்போது, ‘‘அடுத்த விசாரணை யின்போது கூவம் ஆறு பாதுகாவ லர் நியமனம் தொடர்பாக பொதுப் பணித்துறை எடுத்து வரும் நடவடிக் கைகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை திறந்து விடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் செய்த ஆய்வுகள் தொடர்பாக அறிக்கைகளை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், அடுத்த விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT