Published : 14 Mar 2015 09:29 AM
Last Updated : 14 Mar 2015 09:29 AM

கடலில் தத்தளித்த புதுகை மீனவர்கள் 3 பேர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினம் மீன்பிடி தளத்திலி ருந்து மார்ச் 11-ல் 140 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில், ஒரு படகில் சென்ற சிவபெருமாள்(55), பூவரசன்(55), மூர்த்தி(50) ஆகியோர் நேற்று முன்தினம் கரை திரும்பவில்லை.

இதையடுத்து, சக மீனவர்கள் நேற்று தனி படகுகளில் தேடிச் சென்றனர். அப்போது, 8 கடல் மைல் தொலைவில் படகின் இயந் திரம் பழுதான நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x