Published : 22 Mar 2015 10:59 AM
Last Updated : 22 Mar 2015 10:59 AM
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பெ.சீத்தாராமன் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிக்கை:
‘தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பெ.சீத்தாராமனை ஆளுநர் நியமித்துள்ளார். இவர் 2 வருடங்களுக்கு இப்பதவியை வகிப்பார். சீத்தாராமன், இதற்கு முன்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராக பதவி வகித்து வந்தார்’ என அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மாநில தேர்தல் ஆணையராக இருந்த சோ.அய்யர் பணி ஓய்வுபெற்றதை அடுத்து சீத்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT