Published : 29 Mar 2015 11:56 AM
Last Updated : 29 Mar 2015 11:56 AM

வண்டலூர் பூங்கா மார்ச் 31-ம் தேதி செயல்படும்

வண்டலூர் உயிரியல் பூங்கா மார்ச் 31-ம் தேதி செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவது வழக்கம். இருப்பினும் தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம்போல் செயல்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x