Published : 29 Mar 2015 12:09 PM
Last Updated : 29 Mar 2015 12:09 PM
ஒன்றாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்துப் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் (2015-2016) இருந்து ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, 2015-16-ம் கல்வி ஆண்டில் பல்வேறு வாரியங் களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழி பாடத்தை 1-ம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, 1-ம் வகுப்பு பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டு பாட நூல் கழகத்தின் சென்னை மற்றும் மதுரை வட்டார அலுவலகங்களில் விற்பனைக்குத் தயார்நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள் சென்னை வட்டார அலுவலகத்திலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட் டங்களில் உள்ள பள்ளிகள் மதுரை வட்டார அலுவலகத்திலும் பாடநூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பாடநூலின் விலை ரூ.60 ஆகும். வட்டார அலுவல கங்களின் முகவரி வருமாறு:
சென்னை: வட்டார அலுவலர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், வேளச்சேரி மெயின் ரோடு, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகில், திரு வான்மியூர், சென்னை 600 041. தொலைபேசி எண்: 044-22541326, செல்: 9962478471, 9566116271.
மதுரை: வட்டார அலுவலர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பாண்டியன் சூப்பர் மார்க்கெட், செந்தாமரை கிடங்கு, முடக்கு சாலை, தேனி ரோடு, மதுரை 625 010. தொலைபேசி எண் 0452-2381484 செல்: 9894057786 என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT