Published : 03 Apr 2014 12:48 PM
Last Updated : 03 Apr 2014 12:48 PM
மத்திய சென்னையில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் புதன்கிழமை மனுதாக்கல் செய்தனர்.
இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஆபித் பக்ஷிக் உசேன் (37) வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆதி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அம்பேத் வெங்கடேஷ் (52), ராகு காலத்தில் பகல் 12.47 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு சொத்து எதுவும் கிடையாது என்றும் அவரது மனைவிக்கு 2 சவரன் நகை மட்டும் உள்ளது என்றும் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் ஆதரவு கோரியுள்ள தாகவும் கூறினார்.
மத்திய சென்னை தொகுதியில் இதுவரைக்கும் 45 மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் தேமுதிகவில் 2, சமாதானக் கட்சி 1, சுயேச்சைகள் 3 என 6 பேர் வாங்கியுள்ளனர். இது வரை 11 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT