Published : 06 Mar 2015 09:07 PM
Last Updated : 06 Mar 2015 09:07 PM

தமிழக மீனவர்களை இலங்கை விடுவிக்கக் கோரி கடலில் ஒப்பாரிப் போராட்டம்

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி கடலில் தண்ணீரை வாரி இறைத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் காரைக்கால் மீனவப் பெண்கள் ஈடுபட்டனர்.

நாகை, காரைக்காலைச் சார்ந்த 86 மீனவர்கள் பிப்ரவர் மாதம் 26-ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 86 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவேண்டும் என அவர்களது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட 86 மீனவர்களையும் விடுவிக்கவேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட காரைக்கால் மீனவப் பெண்கள் கடலில் தண்ணீரை வாரி இறைத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்களை இலங்கை சிறைபிடிப்பதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று காரைக்கால் மீனவப் பெண்கள் கேட்டுக்கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x