Published : 09 Mar 2015 10:56 AM
Last Updated : 09 Mar 2015 10:56 AM
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம்போக பாசனத்துக்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு நாளை (10.3.2015) முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT