Published : 13 Mar 2015 09:59 AM
Last Updated : 13 Mar 2015 09:59 AM
2015-ம் ஆண்டு ஹஜ் பயணத் துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகளிடம் இருந்து தமிழக ஹஜ் குழுவால் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந் திய ஹஜ் குழு கேட்டுக் கொண்டபடி, ஹஜ் பயணி களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாநில ஹஜ் கமிட்டி முடிவுசெய்துள்ளது. இதற்கான குலுக்கல் வருகிற 18-ம் தேதி (புதன் கிழமை) சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் உள்ள ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
மாநில ஹஜ் குழு மூலம் விண்ணப்பித்துள்ள ஹஜ் பயணிகள் இக்குலுக் கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT