Published : 20 Mar 2015 06:56 PM
Last Updated : 20 Mar 2015 06:56 PM
வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை குறித்த சிபிசிஐடி விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு தாக்கல் செய்யப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ண மூர்த்தி பெயரும் தொடர்புபடுத்தப்பட்டு அவர் பதவி இழந்தார்.
இதனால், பல்வேறு அரசியல் தலைவர்கள் முத்துக்குமாரசாமி மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் அடிப்படையில், முத்துக்குமாரசாமி மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
தற்போது வேளாண் துறை அதிகாரிகள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்களிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
முத்துகுமாரசாமி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிபிசிஐடி அதிகாரிகள் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT