Published : 17 Mar 2015 06:14 PM
Last Updated : 17 Mar 2015 06:14 PM

கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

''நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அதிமுக ஆதரித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வரும் 23ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.

தூத்துக்குடி, நெல்லையில் கடந்த இரு மாதங்களில் 100 கொலைகள் நடந்துள்ளன. இதற்காக காவல் அதிகாரிகளை மாற்றுவது மட்டும் போதாது. கொலைகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம் வேண்டும்.

எரிவாயு மானியம் கேட்பதில் ஆதார் அட்டை கேட்பது சரியல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முழுமையாக பின்பற்ற வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x