Published : 05 Mar 2015 12:56 PM
Last Updated : 05 Mar 2015 12:56 PM
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பில், "திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் வரையிலும், அவருக்குப் பதிலாக அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT