Published : 27 Mar 2015 09:59 AM
Last Updated : 27 Mar 2015 09:59 AM

சென்னை பல்கலை. துணை பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக் கழகத்தின் துணை பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக செனட் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தலைமை தாங்கினார். பதிவாளர் பா.டேவிட் ஜவகர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 226 பேருக்கு துணைவேந்தர் தாண்டவன் ஆராய்ச்சிப் பட்டங்களை (பிஎச்.டி.) வழங்கினார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் 123 பேர் ஆண்கள். 103 பேர் பெண்கள். பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளரான பொன் பாலனும் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x