Published : 25 Mar 2015 09:26 AM
Last Updated : 25 Mar 2015 09:26 AM

பாலத்திலிருந்து கீழே விழுந்த எஸ்ஐ பலி

மத்திய இணையமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேம்பாலத்திலி ருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும் மிடிப்பூண்டியில் இலங்கை அகதி கள் முகாம் உள்ளது. இதை நேற்று, மத்திய உள்விவகாரங்களுக்கான இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் ஆய்வு செய்தார். இதை யொட்டி சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலை பகுதிகளில் போலீஸார், நேற்று முன்தினம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் சோழவரம் அருகே உள்ள காரனோடை மேம் பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, கவரப்பேட்டை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் பாலையா (57) உள்ளிட்ட போலீஸார் வெடிகுண்டு சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது பாலையா மேம்பாலத்தில் நின்றபடி பாலத்தின் அடிப்பகு தியை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, பாலத்தி லிருந்து தவறி ஆற்றில் விழுந்தார். 70 அடி உயரத்தில் இருந்து விழுந் ததால் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்திலேயே உயிரிழந் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x