Published : 03 Mar 2015 09:18 AM
Last Updated : 03 Mar 2015 09:18 AM

வாக்காளர் பட்டியல் திருத்தம்: சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.

சிறிய தவறுகூட இல்லாத வாறு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் வகையில் மார்ச் 3-ம் தேதி (இன்று) முதல் தேசிய அளவில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்து களை கேட்டறிவதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை கோட்டையில் இன்று நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அதிமுக, திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x