Published : 14 Mar 2015 03:01 PM
Last Updated : 14 Mar 2015 03:01 PM

காவிரியின் குறுக்கே அணை: கர்நாடக அரசைக் கண்டித்து மன்னார்குடி விவசாயிகள் போராட்டம்

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நிலையிலும், கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, கர்நாடக அரசு அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது.

இதை எதிர்த்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவின் உருவபொம்மையை எரித்தனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இது குறித்து கூறுகையில், ''அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும், தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ,பிரதமருக்கு கோரிக்கை வைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x