Published : 11 Mar 2015 09:07 AM
Last Updated : 11 Mar 2015 09:07 AM
சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோரை இடமாறுதல் செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பெரம்பூரில் பி அன்ட் சி மில் உள்ளது. இந்த மில் வளாகத்தில் தொழிலாளர்களுக் கான குடியிருப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் மில் மூடப்பட்டதை யடுத்து குடியிருப்புகளை காலி செய்யும்படி தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.
இதை எதிர்த்து இளங்கோவன் என்பவர் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மில் அமைந்திருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். அந்த இடத்தை தனியாருக்கு விற்க முடியாது.
அந்த இடத்தை வாங்கிய நபர் எங்களை அங்கிருந்து காலி செய்யும்படி வற்புறுத்தி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலாளர்களை தொந் தரவு செய்யக் கூடாது, அவர் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என 8.5.2014-ல் உத்தர விட்டது.
இந்நிலையில், குடியிருப்பில் 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி ஆணை யத்தில் புகார் கூறப்பட்டது. ஆணைய உறுப்பினர்கள் குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர், தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத் தரவை மதிக்காததால் சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகர் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித்து வழக்கில் தீர்ப்பு கூறுவதை ஒத்திவைத்தார்.
தற்போது, நீதிபதி சி.எஸ்.கர்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிகிறார். அவர் இந்த வழக்கில் நேற்று தீர்ப் பளித்தார். அதில், சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகி யோரை சென்னையில் இருந்து வேறு பகுதிக்கு இடமாறுதல் செய்வது தொடர்பாக தலைமை செயலரும், உள்துறை செயலரும் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். இத்துடன் அவமதிப்பு மனு முடித்து வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT