Published : 04 Mar 2015 09:53 AM
Last Updated : 04 Mar 2015 09:53 AM
தனது பிறந்தநாளின்போது அன்பளிப்பாக கிடைத்த ரூ.24 லட்சத்தை திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக திமுக இளைஞரணி அறக்கட்டளை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது பிறந்தநாள் விழா, மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஏராளமான திமுக தொண்டர்கள், இளைஞரணியினர் ஸ்டாலினை அவரது இல்லத்திலும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலிலும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மாலை, கிரீடம், வாள், கேடயம், பொன்னாடை, செங்கோல், பூச்செண்டு என அணிவித்த வகையிலும், உண்டியல் மூலமும் ரூ.24 லட்சத்து 10 ஆயிரத்து 95 நிதி கிடைக்கப் பெற்றது.
இந்த நிதியை திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT