Published : 04 Mar 2015 09:12 AM
Last Updated : 04 Mar 2015 09:12 AM
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தார். இதையடுத்து மீண்டும் அவர் தமிழகம் வர வேண்டும் என்று தொண்டர்கள் விடுத்த கோரிக்கை யின் அடிப்படை யில் அவர் நாளை கோவை வரவுள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள ஏ.பி. திருமண மஹாலில் அமித்ஷா தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் மற்றும் மண்டல் தலைவர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. மேலும் அவர் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்து, 1000 உறுப் பினர்களை சேகரித்த தனி நபர்களை பாராட்டவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT