Published : 15 Feb 2015 01:16 PM
Last Updated : 15 Feb 2015 01:16 PM
சென்னையில் தமாகா பேச்சாளர்கள் பயிற்சி முகாம், நேற்று நடந்தது. முகாமுக்கு ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் முதல்கட்டமாக 50 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதுவரை 38 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மேலும் 12 லட்சம் பேர் இணைவர்.
திருப்பூரில் வரும் 21-ம் தேதி தமாகா பொதுக்கூட்டம் நடக்கிறது. கட்சி நிர்வாகிகள் ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்படுவர். அதன்பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகை, இலங்கைத் தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT