Published : 27 Feb 2015 10:43 AM
Last Updated : 27 Feb 2015 10:43 AM
அமெரிக்கா மருத்துவமனையில் உயிரிழந்த அம்பானி சகோதரர்களின் மைத்துனர் உடல், சென்னை மயிலாப்பூர் மயானத் தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப்பச்சன் உட்பட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என்ற மகன்களும் மற்றும் நீனா, தீப்தி என்ற மகளும் உள்ளனர். நீனாவின் கணவர் கோத்தாரி(53). தொழிலதிபரான இவர் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 22-ம் தேதி கோத் தாரி உயிரிழந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டது. தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு திரைப்பட நடிகர் வெங்கடேஷ் மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் என பலர் சென்னை வந்து கோத்தாரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவரது உடல் மயிலாப்பூர் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பகல் 12 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. அப்போது முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT