Published : 18 Feb 2015 09:59 AM
Last Updated : 18 Feb 2015 09:59 AM
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
இது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கொறடா ஆர்.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 4 நாட்களுக்கு நடைபெறும் என பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச 4 நாட்கள் போதாது. குறைந்தபட்சம் 10 நாட்களாவது கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், பேரவைத் தலைவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு சக்கரபாணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT