Published : 26 Feb 2015 09:34 AM
Last Updated : 26 Feb 2015 09:34 AM

சென்னை சட்டக் கல்லூரியில் மோதல்: மாணவர்கள் 5 பேருக்கு காயம்

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கல்லூரியிலேயே படித்து வரும் இறுதியாண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒரு குழுவினருடன் சேர்ந்து கொண்டு, மற்றொரு குழு மாணவர்களை ஆயுதங்களுடன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், மாணவர்கள் திவாகரன், அப்துல்ரசாக், முத்துசபரீசன், ஹரிவரதன், பூபாலன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் இரு தரப்பு மாணவர்களும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x