Published : 15 Feb 2015 10:26 AM
Last Updated : 15 Feb 2015 10:26 AM
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 8 எம்.பி.க்கள் அடங்கிய பொது நிறுவனங்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
எம்.பி சாந்தகுமார் தலைமையிலான இக்குழுவினர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள அரிய மணல் ஆலையை நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்தனர்.
பின்னர் 2-வது அணுஉலையில் மின் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், 3, 4-வது அணுஉலைக்கான பூர்வாங்க பணிகள் குறித்தும் இந்திய அணுசக்தி துறை தலைவர் கே.சி. புரோகித், செயல் இயக்குநர் நகாய்ச்சி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT