Published : 27 Feb 2015 10:10 PM
Last Updated : 27 Feb 2015 10:10 PM
இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது: ''தமிழக மீனவர்கள் 29 பேரை 3 படகுகளுடன் இலங்கை கடற்படை நேற்று சிறை பிடித்துள்ளது. இந்த 29 பேரையும் இலங்கை கடற்படையினர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இதற்காக இந்திய வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT