Published : 15 Feb 2015 10:23 AM
Last Updated : 15 Feb 2015 10:23 AM

ரூ.500 கள்ள நோட்டு: ஒருவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த சின்னக்காளை மகன் சக்திவேல் (44) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மக்கள் அதிகம் வந்துசெல்லும் சிறிய வியாபார நிறுவனங்கள் மற்றும் சந்தைகளில் பொருட்கள் வாங்குவதுபோல கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது சக்திவேலுவின் வழக்கமாம். இவரிடமிருந்து ரூ.1.98 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சக்திவேல் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்திய நவீன பிரின்டர், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x