Published : 14 Feb 2015 11:30 AM
Last Updated : 14 Feb 2015 11:30 AM
கூடங்குளத்தில் எம்.பி சாந்தகுமார் தலைமையில் 8பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மின் உற்பத்தி, பாதுகாப்பு குறித்து இந்திய அணுமின் கழகத் தலைவர் மற்றும் அணுமின் நிலைய அதிகாரியுடன் நிலைக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளத்தில் 1000மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கூடங்குளம் பகுதி மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களுக்காக 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள், எந்த பஞ்சாயத்து மக்களுக்கு பயன்படும்? மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதி ஆகியவற்றையும் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT